Sunday 23 September 2012

பிரிவின் வலி


(வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு சகோதரிகளின் சார்பில் ஒரு கடிதம்)







பிரிவுகள் 
உறவை வலுப்படுத்தும் 
உண்மைதான் 
வார்த்தையளவில் ...

உணர்ச்சியுடன் 
சிந்தித்தால்தான் 
உள்ளத்தின் 
வலி புரியும்....

சண்டையிட்டு 
வாங்கிய அடிகளின் 
வலியைவிட 
வேதனையானது 
சண்டையிட ஆளில்லாத 
தனிமையின் வலி.....

தொலைபேசி பேச்சுக்களினால் 
வார்த்தைகளைப் 
பரிமாறிக் கொள்ளலாம்...
கழிந்த ஆண்டுகளின் வாழ்கையை????

உனக்காக 
நிகழ்வுகளைச் சேமிக்க 
முடியாவிட்டாலும்
நிகழ்ச்சியின் அனுபவங்களை 
சேமித்து வைத்துள்ளோம் 
நீ வரும் நாளை 
எதிர்பார்த்து !!!

No comments:

Post a Comment